நெடுவாசல் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்ற பொன். ராதாகிருஷ்ணன்... டுவிட்டரில் கொந்தளிக்கும் மக்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்படுவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு டுவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட உள்ளதாகவும் திட்டம் செயல்படுத்தப்படாது என்று நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ' ஒப்பந்தம் கையெழுத்து' ஆவதால் திட்டம் நிறைவேறும் என்ற அச்சம் வேண்டாம் என பொது மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
திட்டம் செயல்படுத்தப்படாது
நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டது என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
|
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுவதாகவும், பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
குழப்பம் வேண்டாம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
|
டுவிட்டரில் எதிர்ப்பு
இதை சொல்வதற்கு ஒரு அமைச்சர் ஏன் என்று கேட்டுள்ள வலைத்தளவாசிகள் பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
|
கையெழுத்து ஏன்?
திட்டமே வேண்டாம் என்று கூறும் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன் என்று டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பொன். ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறாரோ?