For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜெயலலிதா உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

Pranab getting delay to come Chennai

அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செல்லுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை அவர் தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

ஆனால் அந்த விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், பிரணாப் சென்னைக்கு வராமல் மீண்டும் டெல்லிக்கே திரும்பிச் சென்றார். பின்னர், விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவும் வருகை தந்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் உடல் கண்ணாடிப் பெட்டியால் மூடப்பட்டது.

English summary
Due flight’s technical fault President Pranab Mugarjee is getting delay to come Chennai to pay tribute to Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X