For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தியா-யு.எஸ். சி.இ.ஓக்களை சந்திக்கும் மோடி, ஒபாமா
டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமா டெல்லியில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களை இன்று சந்திக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள ஒபாமா, டெல்லி தாஜ் ஹோட்டலில் இன்று இந்திய- அமெரிக்கா தொழில்துறை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்தான் இம்மாநாட்டில் முக்கிய பொருளாக விவாதிக்கப்படுகிறது.
பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி உட்பட 30 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதில் 17 பேர் இந்திய நிறுவனங்களின் சி.இ.ஓக்கள்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டர், அதானி உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
Comments
English summary
Business is a big focus of US president Barack Obama's three-day visit to India and he, alongwith Prime Minister Narendra Modi, will meet and address top CEOs from both countries this evening.
Story first published: Monday, January 26, 2015, 17:39 [IST]