உற்சாகமாக சிரித்துக்கொண்டே சென்று பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டுப் பதிவு!
நாடாளுமன்ற வாளகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது குடியரசுதலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பிரதமர் மோடி, உற்சாகமாக சிரித்தபடி தன் சகாக்களுடன் பேசியபடி சென்று தன் வாக்கைப் பதிவு செய்தார்.
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திரமோடி தன் சகாக்கள் அமித்ஷா மற்றும் அருண் ஜேட்லியுடன் சிரித்தபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்து தன் வாக்கை பதிவு செய்தார்.
இன்று நாடு முழுவதும் 32 மாநில தலைநகர்களில் 14ஆவது குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியார், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரை முருகன் மற்றும் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் தன் சகாக்களான பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி உற்சாகமாக வந்தார். மோடி தன் நண்பர்களுடன் சிரித்தபடி பேசிக்கொண்டே சென்று, தன் வாக்கைப் பதிவு செய்தார்.