2 குழந்தைகளுக்கு மேல் உள்ள முஸ்லிம்களை தண்டியுங்கள்: பிரவீன் தொகாடியா சர்ச்சை பேச்சு
டெல்லி: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம்களை தண்டிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் "தாமதத்திற்கும் முன் செயல்பட வேண்டிய நேரம்" என்ற தலைப்பில் பிரவீன் தொகாடியா தெரிவித்திருக்கும் செய்தி:
முஸ்லிம்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும். இவர்களுக்கு ரேஷன், வேலை , கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
திட்டமிட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாப்புலேஷன் ஜிகாத்திற்கு எதிராக நாம் நிற்காவிட்டால், பாரதம் விரைவில் இஸ்லாமியர்களின் நாடாக மாறிவிடும்.
அரசியல் அழுத்தங்களை தவிர்த்து 2 குழந்தைகள் என்ற விதிமுறையை செயல்படுத்த வேண்டும். அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு.
இவ்வாறு தொகாடியா கூறியுள்ளார்.