மோடிக்கு செல்ஃபியில் பதிலடி கொடுக்கும் ராகுல்காந்தி! சபாஷ் சரியான போட்டி
டெல்லி: இனிமேல் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் செல்ஃபி பிரியர் என்று ஒதுக்கிவிட முடியாது.. இந்த பட்டியலில் தற்போது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியும் இணைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, சுற்றுப் பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் பலரோடு சேர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி போட்டோக்கள் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Chavakkad (Thrissur, Kerala): Rahul Gandhi visits Govt established fishermen colony, clicks a selfie with youths. pic.twitter.com/GVIT8i9sZa
— ANI (@ANI_news) May 27, 2015
இதை ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் பலரும் கேலி, கிண்டல் செய்துவருகின்றனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் "செல்ஃபி விஷயத்தில் பிரதமரை விமர்சனம் செய்ய கூடாது. அவருடன் போட்டோ எடுக்க மக்கள் விரும்புகிறார்கள். யாருமே போட்டோ எடுக்க விரும்பாத தலைவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்துவது இயல்புதான்" என்றார்.
ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்த சில மணி நேரங்களில் ராகுல்காந்தி தனது முதல் பப்ளிக் செல்ஃபியை கேரள மாநிலம் சவக்காடு என்ற பகுதியில் அரங்கேற்றினார். கேரளாவில் சுற்றுப் பயணம் செய்த ராகுல்காந்தி சிறுவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். சபாஷ் சரியான போட்டி.