சோனியா, ராகுல் இடையே பிரச்சனை இல்லை, ஆனால்...: திக் விஜய் சிங்
டெல்லி: தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது இல்லை என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நினைப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கட்சியில் உள்ளவர்கள் தன்னை சுதந்திரமாக செயல்பட விடுவது இல்லை என்று ராகுல் காந்தி நினைக்கிறார். ராகுல் ஒன்றும் பொறுப்புகளில் இருந்து ஓடவில்லை. ராகுல் விடுப்பில் செல்லும் முன்பு கட்சியின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்தார்.
ராகுலுக்கும், சோனியா காந்திக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் சிந்தனைகள் வேறு வேறாக உள்ளது. இது அனைத்து குடும்பங்களிலும் உள்ளது தான். ஒரு விஷயம் குறித்து முடிவு எடுக்கையில் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது என்றார்.
கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கவே ராகுல் காந்தி விடுப்பில் சென்றுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.