For Daily Alerts
Just In
வெங்கையா நாயுடுவுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய சுஷ்மா
டெல்லி: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினார் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
நாடுமுழுவதும் இன்று ரக்ஷா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் கையில் ராக்கி கட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரித்துள்ளார். பல பள்ளிக் குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கையில் ராக்கி கட்டினர்.
இதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். டெல்லி முதல்வர் அரவிந்த் ஜேஜ்ரிவால் தனது சகோதரியுடன் ஹரித்வாரில் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments
English summary
External Affairs Minister Sushma Swaraj on Saturday tied Rakhi to Union Parliamentary Affairs Minister Venkaiah Naidu on the occasion of Rakshabandhan.
Story first published: Saturday, August 29, 2015, 16:19 [IST]