திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயான மாடல் ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன் உள்ளிட்டோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
ராகுலும், ரஷ்மியும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கையில் முதன்முதலாக சந்தித்து காதலில் விழுந்துள்ளனர். அதன் பிறகு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராகுல் தனது மனைவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு பெரும்புள்ளிகளுடன் பேரம் பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராகுல் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ரஷ்மி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.