For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேஷாசலத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சேஷாசலம்: ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மர கட்டைகளை கடத்துவதாக சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Red sandalwood confiscated at the time of Smuggling

இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டி எடுப்பதை கண்டறிந்தனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார், 5 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரை கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

கடத்தப்பட இருந்த இரண்டே கால் டன் எடைகொண்ட 70 செம்மரக் கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். சேஷாசலம் வனப்பகுதியில் தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Red sandal wood trees confiscated fro Shesasalam, Andhra today by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X