For Quick Alerts
For Daily Alerts
Just In
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்... லாலு கட்சி எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
பாட்னா: பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி, பலாத்காரம் செய்த ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ., ராஜ்பல்லா யாதவ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் நவாடா சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்து வருபவர் ராஜ்பல்லா யாதவ். இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியைக் கடந்த ஒன்பதாம் தேதி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்பல்லாவைக் கைது செய்ய அம்மாநில போலீஸ் டிஜஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், ராஜ்பல்லாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே இன்று பிற்பகல் அறிவித்துள்ளார்.
இதனால், ராஜபல்லா எந்நேரமும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
English summary
Rashtriya Janata Dal (RJD) MLA Raj Ballabh Yadav, who has been accused of kidnapping and sexually assaulting a minor girl, was on Sunday suspended from the party.
Story first published: Sunday, February 14, 2016, 16:19 [IST]