தானேவும் இல்லை தலோஜாவும் இல்லை,ஆர்தர் சாலையும் இல்லை.. வீட்டுக்குப் போனார் சல்மான்!
மும்பை: கார் விபத்து வழக்கில் 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை ஆர்தர்ரோட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி சல்மான் கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது அவர் தானே மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் 18 நாட்கள் கழித்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து சல்மான் கானை மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தானேவும் இல்லை தலோஜாவும் இல்லை
முன்னதாக சல்மான்கான் தானே சிறை அல்லது தலோஜா சிறையில் அடைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில் சல்மான்கான் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து கருத்து கூறிய சிறை அதிகாரி, எந்த சிறையில் அடைப்பது என்று சிறை நிர்வாகம்தான் எந்த சிறை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சிறைத்துறை டிஐஜி இதுகுறித்து முடிவெடுப்பார். அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட மா்ட்டாது. அனைத்து குற்றவாளிகளையும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் பாவிப்போம். விதிப்படி முதலில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் சல்மான் கான். பின்னர் அவர்கள், அவரை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். சிறை அதிகாரிகள், எந்த சிறை என்பதை முடிவு செய்து அங்கு போய் அடைப்பார்கள்.
கொங்கன் பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் பொதுவாக தானே அல்லது தலோஜா சிறையில்தான் அடைக்கப்படுவது வழக்கம். எனவே சல்மான் கானும் இந்த இரு சிறைகளில் ஒன்றில் அடைக்கப்படலாம். சிறையில் அவர் சாதாரண தண்டனை பெற்ற கைதியாகத்தான் நடத்தப்படுவார். இருப்பினும் அவரது பிரபலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். இதுதொடர்பாக சிறைத்துறையினருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடைசியில் சல்மான்கான் தானேவுக்கும் போகவில்லை தலோஜாவுக்கும் போகவில்லை மும்பை ஆர்தர்ரோடு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.