சல்மான் கார் விபத்து வழக்கு கடந்து வந்த பாதை..!
மும்பை: போதையில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை பற்றிய ஒரு பார்வை:
2002 செப்டம்பர் 28: சல்மான் கான் கார் ஏறியதில் நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
2002 செப்டம்பர் 29: சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
2003, மே 2: குற்றங்களை டிஸ்மிஸ் செய்ய சல்மான் கேட்டுக்கொண்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
2007, அக்டோபர் 3: விபத்து வழக்கின் முக்கிய சாட்சியம் மரணமடைந்தார்.
2013, ஜூலை 24: திட்டமிடாமல் நடந்த, தற்செயல் கொலை வழக்கு, சல்மான்கான் மீது பதியப்பட்டது.
2014, நவம்பர் 24: இந்த வழக்கை விரைந்து நடத்தி முடிக்குமாறு அரசு வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
2015, மார்ச் 12: விபத்து நடந்ததும், அந்த இடத்தில், சல்மான்கான் இல்லை என்று, 2002ல் எப்.ஐ.ஆர் போட்ட போலீஸ் தரப்பு கூறியது.
2015, ஏப்ரல் 10: இந்த வழக்கில், பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதம்.
2015, மே 6: கார் விபத்து வழக்கில், சல்மான்கான் குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பு.