ஜெ. வழக்குக்கு நிகராக நீண்ட காலம் இழுத்தடித்த சல்மான் வழக்கு!
மும்பை: எப்படி தமிழகத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல காலம் நீண்டுஇழுபறியாக இருந்ததோ அதேபோல சல்மான் கான் மீதான வழக்கும்13 ஆண்டுகாலம் இழுத்தடித்து விட்டது.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் அவர் தண்டனை பெறுவாரா? விடுதலை அடைவாரா என்ற பெரும் பரபரப்பு பாலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கானின் கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீடித்தது.
பல திருப்பங்களுக்குப் பின்னர் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இன்று மும்பை நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனை எதிர்ப்பார்த்து பெரும் பரபரப்புடன் காத்திருக்கிறார்கள், சல்மான் மீது பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள்.