சிக்குகிறார் சசிகலா?: சிறை முறைகேடு பற்றி அடுத்த வாரமே முதல்கட்ட அறிக்கை: சித்தராமையா
பெங்களூர்: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி முதல்கட்ட விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் அளிப்பார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இவருக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைா நேற்று கூறிிருந்தார். இதனிடையே, விசாரணை அதிகாரியாக கர்நாடகா உள்துறை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகைில், "விசாரணை அதிகாரி முதல்கட்ட விசாரணை அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்வார். முழு விசாரணை அறிக்கையை 1 மாதத்திற்குள் தாக்கல் செய்வார். டிஐஜி ரூபா அனுமதியில்லாமல் தொடர்ந்து பத்திரிகைாளர்களை சந்தித்து பேட்டியளிப்பது விதிமுறைக்கு முரணானது" என்று சித்தராமையா தெரிவித்தார்.