என்னால்தான் சசிகலா நடராஜன் தேர்தலில் போட்டியிடவில்லை- சசிகலா புஷ்பா 'பொளேர்'
டெல்லி: தாம் குற்றம்சாட்டியதால்தான் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடவில்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் சசிகலா நடராஜன் சதி செய்வதாக முதன் முதலாக நான்தான் தெரிவித்தேன். தஞ்சாவூர் தொகுதியில் சசிகலா நடராஜன் போட்டியிட திட்டமிடுவதாகவும் கூறியிருந்தேன்.
தற்போது சசிகலா நடராஜன், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடவில்லை என அறிவிப்பு வந்துள்ளது. நான் குற்றம்சாட்டியதாலே சசிகலாவின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது.
என்னால்தான் அந்த கும்பலின் எண்ணம் நிறைவேறாமல் போனது. ஒரு சதிகார கும்பலின் பிடியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை மீட்டதாக மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தாய் மகளுக்கு செய்த கடமையாக ஜெயலலிதாவுக்கு நான் இதை செய்திருக்கிறேன்.
சசிகலா நடராஜன் என்ற ஒரு தனிநபர் மீது குற்றம்சாட்டினால் ஒரு அரசாங்கமே என் மீது வழக்கு போடுகிறது. நான் ஒரு பேட்டி அளித்தால் 2 வழக்குகள் போடப்படுகின்றன. ஆனால் நீதித்துறை எனக்கு பாதுகாப்பாக இருப்பதால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அதிமுஎம்எல்ஏக்கள்
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.