டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்- ஆளுநர் இடையே மோதல்! எச்சரிக்கையை மீறி பதவியேற்ற தலைமைச் செயலாளர்!!
டெல்லி: டெல்லியின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டாம் என்று முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டதையும் மீறி சகுந்தலா காம்லின் இன்று அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி அரசின் செயலாளர் சகுந்தலா காம்லினை தலைமைச் செயலாளராக துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்தார். இதனால் ஆளுநருக்கும் முதல்வர் கேர்ஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் வெடித்தது.
துணைநிலை ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்றும் டெல்லி அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக கேஜ்ரிவால் எழுதியிருந்த கடிதத்தில், காம்லினை தலைமைச் செயலாளராக நியமித்திருப்பது விதிகளுக்கு எதிரானது. எனவே, அப்பொறுப்பினை ஏற்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் கேஜ்ரிவாலின் இந்த எதிர்ப்பையும் மீறி தலைமைச் செயலராக சகுந்தலா காம்லின் பொறுப்பேற்றிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.