லோக்சபாவில் ஆவணங்களை கிழித்தெறிந்து அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 5 நாட்களுக்கு சஸ்பென்ட்!
டெல்லி: லோக்சபாவில் ஆவணங்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் லோக் சபாவில் போப்பர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனை பாஜகவினர் எழுப்பினர்.
பாஜக எம்பி மீனாட்சி லேக்கி போப்பர்ஸ் பீரங்கி ஊழலை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவணங்களையும் அவர்கள் கிழித்தெறிந்து கூச்சலிட்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
அதன்படி ஜி.கோகாய், கே.சுரேஷ், ரஞ்சித் ரஞ்சன், ஆதிரஞ்சன் சவுத்ரி, சுஷ்மிதா தேவ், எம்கே.ராவன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பேன்ட் செய்யப்பட்டுள்ளனர்.