சிறையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்ட காருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பு
பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்பாக ஜெயலலிதாவின் ஆஸ்தான காருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.
ஜெயலலிதா வழக்கமாக விலையுயர்ந்த டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணிப்பது வழக்கம். சிறையில் இருந்து பெங்களூர் விமான நிலையம் செல்வதற்காக தமிழகத்தில் இருந்து இன்று அந்த கார் சிறை வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கார் சிறை வளாகத்திற்கு வந்ததும், அங்கு வைத்து காருக்கு சிறப்பு திருஷ்டி கழிப்பு பூஜை நடந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பூஜை நடந்தபோது அருகில் இருந்தனர்.
பூசணிக்காய் உடைத்து அந்த காருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன. கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் இந்த கார் சிறைக்கு கொண்டுவரப்பட்டு காத்திருந்தது. ஆனால் அன்று ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் கார் திருப்பியனுப்பப்பட்டது. இதனால் இன்று திருஷ்டி கழித்த பிறகு கார் ஜெயலலிதாவுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது.