சன்னியின் ஆணுறை விளம்பரத்தால் பலாத்காரங்கள் அதிகரிக்கும்: இடதுசாரி தலைவர் அஞ்சான்
லக்னோ: சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தால் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று மூத்த இடதுசாரி தலைவர் அதுல் குமார் அஞ்சான் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவர் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடித்தது பற்றி அவர் பெருமையாக பேசி வந்தார்.
இந்நிலையில் இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் அஞ்சான் கூறுகையில்,
சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை மக்களை பார்க்க அனுமதித்தால் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
அதுல் குமார் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக சன்னி லியோன் ஆன்லைனில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ஆபாசப் படங்கள் போன்று அருவெறுப்பாக இருந்ததாக அவர் மீது மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.