தூக்குக்கு தடை கோரிய யாகூப் மேமன் மனு மீது நாளை விசாரணை- உச்சநீதிமன்றம்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி குற்றவாளி யாகூப் மேமன் தாக்கல் செய்த புதிய நிவாரணம் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நடத்தப்பட்ட முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குற்றவாளி யாகூப் மேமன். இவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கருணை மனுவையும் ஜனாதிபதி தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்திருந்தார். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் யாகூப் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் வரும் 30-ந் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநருக்கு ஒரு கருணை மனுவை அனுப்பி வைத்துள்ளார் யாகூப். அத்துடன் தம்மை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும் அவர் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.