தமிழக சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள்.. மத்திய அரசு திடுக் தகவல்!
தமிழக சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அனுமதித்ததை விட அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழக சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அனுமதித்ததை விட அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வாலாஜா, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், மயிலாடுதுறை, சத்தியமங்கலம் ஆகிய சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் அந்த சிறைகள் நிரம்பி வழிவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 கைதிகள் இருக்க வேண்டிய சத்தியமங்கலம் சிறையில் 200 பேர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 29 பேர் இருக்க வேண்டிய திண்டிவனம் சிறையில் 92 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதே சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. குற்ற நடவடிக்கைகளை குறைத்தால் மட்டுமே கைதிகளின் எண்ணிக்கை குறையும் என தெரிகிறது.