For Daily Alerts
Just In
100 கோடி எண்ணிக்கையை தொட்ட இந்திய தொலைபேசி இணைப்புகள் - டிராய் வெளியீடு
டெல்லி: இந்தியாவில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் இந்த சாதனை இலக்கு எட்டப்பட்டது என தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
மே மாத இறுதியில் 100 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் தரப்பட்டிருந்ததாகவும் இதில் 97 கோடியே 57 லட்சம் இணைப்புகள் மொபைல் ஃபோன் வாயிலான இணைப்புகள் என்றும் டிராய் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தரை வழி இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் மே மாத நிலவரப்படி 2 கோடியே 62 லட்சம் இணைப்புகள் இருந்ததாகவும் இப்புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
Comments
English summary
The total number of telephone connections in the country crossed the record one billion mark in May, bolstered by growth in number of mobile users.
Story first published: Saturday, July 11, 2015, 17:26 [IST]