For Daily Alerts
Just In
அத்து மீறிய கோவில் குருக்கள்... அடித்து, உதைத்த பெண்!
லக்னோ: உத்திர பிரதேசத்தில் அத்து மீறி நடந்த கோயில் குருக்களை அடித்து உதைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தன்னிடம் அத்துமீற முயன்ற கோயில் குருக்கள் ஒருவரை அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தசாரா என்ற பெண் போலீஸ் காலனி பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பூஜை முடிந்த பின்னர் பிரசாதம் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் கோயில் குருக்கள் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை அடித்து உதைத்தார். தாசாரா அளித்த புகாரின் பேரில் கோயில் குருக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
Uttar Pradesh lady beaten a temple saint for misbehaving to her.
Story first published: Monday, May 4, 2015, 17:59 [IST]