For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு, காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதியாக்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையில், இந்திய தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Terrorists today opened fire on Jammu and Kashmir

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய யூரி தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவவீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

English summary
Terrorists today opened fire on a joint police and CRPF party at Kulgam in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X