For Daily Alerts
Just In
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
சென்னை: கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய சட்டசபைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட உத்தரவைச் சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைத்து கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பாணையாக வெளியிடப்படும் ஜூலை 28-ந்தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Nadu assembly session is end, Governor Vidyasagar Rao declared today.