அரசியல் குழப்பம்: ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். ஆளுநர் இன்று சென்னை திரும்ப உள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர்.
இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால். ஜக்கையன் தவிர எஞ்சிய 18 பேர் பதில் அளிக்காததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது நேற்று ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அடுத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து ஆலோசித்தார்.
அரசியல் குழப்பமான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறினாலும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தே விவாதித்தார் என்று கூறுகிறது.