For Quick Alerts
For Daily Alerts
Just In
இறைச்சிக்காக மாடுகள் விற்க நாடு முழுக்க தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது.
இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
In new rules notified by the Environment Ministry on Tuesday, the Centre banned the sale of all kinds of cattle for slaughter at animal markets across the country.
Story first published: Friday, May 26, 2017, 16:15 [IST]