பலாத்கார முயற்சி... 3 ஆண்களிடமிருந்து தப்பும் போது ரயில் மோதி 15 வயது சிறுமி பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் மீது ரயில் ஏறியதில் பரிதாபமாக பலியானார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கடோஜி கலான் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை வானகத்திற்குள் இழுக்க முயன்றுள்ளனர்.
சிறுமியின் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்தபோது ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் அவ்வழியாக வந்த ரயில் சிறுமி மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி பலியானார். இதை பார்த்த அந்த மூன்று பேரும் ஆட்டோவில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
கடைக்கு சென்ற மகள் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் தந்தை கடைத்தெருவுக்கு வந்தார். அப்போது ரயில் தண்டவாளம் அருகே சிதறிக் கிடந்த தனது மகளின் உடலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் நடந்த சம்பவம் பற்றி அவரிடம் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து போலீசில் லல்லா, கம்ரன் மற்றும் மோனு ஆகியோர் மீது புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ சிறிமி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று வழக்குப்பதிவு செய்யவில்லை. முதல்கட்ட விசாரணைக்கு பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.