உ.பி.யில் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிய 2 போலீஸ்: வைரலான வீடியோ
லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் சிக்காத நிலையில் உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரிகள் இருவர் ரோந்து வாகனத்தில் தூங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 35 வயது பெண் ஒருவர் யதார்த் கட்டிடம் அருகே சாலையோரம் கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரித்தபோது தன்னை 3 பேர் காரில் வைத்து பலாத்காரம் செய்து இங்கே தள்ளிவிட்டுச் சென்றதாக அந்த பெண் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகே போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
#WATCH: Few hours after a woman was gang raped in Greater Noida, policemen were caught taking nap in a PCR van near the spot. pic.twitter.com/dZHCHLB7gn
— ANI UP (@ANINewsUP) June 20, 2017
ஏற்கனவே உத்தர பிரதேச போலீசார் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.