For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா!

இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பிரபல பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இது இந்திய விளையாட்டுத்துறையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியவின் பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா பன்வார்.இவர் கடந்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்,தங்கம் வென்று இருந்தார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி,பாட்டியாலாவில் நடந்த பயிற்சி முகாமில்,இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடந்தது.

Weightlifter Sushila Panwar fails dope test, provisionally suspended by federation

அதில் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, ஐ.டபிள்யூ.எப். அறிக்கையில்,மொத்தம் 45 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.அதில் சுஷிலா ரத்த மாதிரியில் மட்டும் தான் 'பாசிட்டிவ்' என்று பதில் கிடைத்துள்ளது.அதனால் அவர் சஸ்பெண்ட செய்யப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இந்திய விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Just days after footballer Subrata Paul tested positive for a banned substance, weightlifter Sushila Panwar has failed a dope test and she has been placed under provisional suspension, reported PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X