அடிப்படை உரிமை.. அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு என்ன சொல்கிறது? #RightToPrivacy
டெல்லி: ஆதார் வழக்கில் அரசியல் சாசனச் சட்டத்தின் 21வது பிரிவின்படி தனி நபர் "பிரைவசி" என்பது அடிப்படை உரி்மையே என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்து விட்டது. எனவே அந்தரங்கத் தகவல்கள் அடங்கிய ஆதார் எண்ணை இனி கட்டாயமாக்க முடியாத நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் சாசனச் சட்டத்தின் 21வது பிரிவில் அடிப்படை உரிமை குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது?
தனி நபர் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பது இந்த சட்டப் பிரிவு. இந்த சட்டத்தின் மூலமாக எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது, கூடாது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உள்ள அவருக்குரிய அடிப்படை உரிமையை யாரும் பறிக்க முடியாது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கூட இந்த சட்டத்தின் படி தனது அடிப்படை உரிமையை இங்கு நிலைநாட்ட முடியும். அதேசமயம், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்குவதை உரிமையாக கோருவதற்கு இந்த சட்டம் வழி வகை செய்யவில்லை.