முதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய புதுமணப்பெண்
ஆக்ரா: முதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான புதுமணப் பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.
நிர்மல் சிங் என்பவர் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அதேப் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர், தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தாக கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு ஆண் குழுந்தை உள்ளது.
இந்நிலையில், விவாகரத்துப் பெற்ற நிர்மல்சிங், தாரா என்ற இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நிர்மல்சிங். இதையடுத்து திருமண வழக்கமான சடங்குகள் முடிந்தப் பிறகு, நடைப்பெற்ற தேனிலவின் போது சந்தேகத்துகுரிய முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,தாரா ஏற்கனவே, ஒரு இளைஞரை காதலித்து வந்ததும், அந்தப்பெண் நகை, பணம் மற்றும் நிர்மல் சிங் முதல் மனைவி மகன் திவ்வானின் செல்போன் ஆகியவற்றை எடுத்து சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் கூறினார். எனவே, நகை மற்றும் பணத்திற்காக இந்த கொலை நிகழ்ந்திருக்க கூடும் என சந்தேகப்படுகிறது .