For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்படுகிறார் தினகரன்? - வீடியோ

இரட்டை இலையை கைப்பற்றுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயர்சித்த வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் டெல்லியில் ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணைக்குப் பின் தினகரன் கைது செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது.

அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. எப்பாடுபட்டாவது இரட்டை இலையை பெற வேண்டும் என தினகரன், இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Will Delhi crime police arrest Dinakaran after inquiry?

மேலும், இடைத்தரகர் சுகேஷை கைது செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தினகரன் முதல் குற்றவாளி என பதிவு செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீசார். அதனடிப்படையில் அவருக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு வர நேரில் சம்மன் கொடுத்தனர்.

அதையடுத்து, தினகரன் டெல்லிக்கு இன்று விமானம் மூலம் சென்றார். அவரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் தினகரன் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

English summary
TTV Dinakaran has gone to Delhi for inquiry with Delhi crime police. After the inquiry will Dinakaran be arrested?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X