சுற்றுலா கேன்சல்... கணவர் மீது கோபம்... மனமுடைந்த பெண் என்ஜீனியர் தற்கொலை!
பெங்களூரு: குடும்ப சுற்றுலா கேன்சலான காரணத்தால், கணவருடன் சண்டை போட்ட பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் மர்சி என்பதாகும் 35 வயதாகும் இவர் கம்மனஹள்ளியில் ஆயில் மில் ரோடு, 14வது கிராஸில் வசித்து வந்த இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் கிரண் ஷெர்பியும் பணியாற்றுகிறார்.
இந்த தம்பதியர் ஒரு வாரம் விடுமுறையில், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இறுதியில், சுற்றுலா செல்வது ரத்தானது. இதனால், ஞாயிறன்று இரவு, 9:00 மணியளவில், மர்சி, கணவர், மாமியாருடன் சண்டை போட்டார். சிறிது நேரத்தில், அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார்.
அதிர்ச்சியடைந்த கிரண் ஷெர்பி, கதவை பலமாக தட்டினார். ஆனால் மர்சி கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, மர்சி சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சுற்றுலா செல்வது கேன்சலான காரணத்திற்காக பெண் பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.