திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% பெண்கள்.. ஆய்வில் தகவல்
டெல்லி : இந்தியாவில் திருமணத்திற்குப் பின்னரும் 40 சதவீத பெண்கள் தங்களது இன்ஷியலை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருமணம் வரை தந்தையின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தும் பெண்கள், திருமணத்திற்குப் பின் கணவரின் பெயரை இன்ஷியலாக போடும் முறை இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், திருமண பந்தங்களை ஏற்படுத்தும் இணையதளம் ஒன்று இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 40 சதவீத பெண்கள் திருமணத்திற்குப் பின்னரும் கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த ஆய்வில் 27 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னரும் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும், 18 சதவீத பெண்கள் குடும்ப பொறுப்புகளில் இருவரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.