For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் தின ஸ்பெஷல்: 'கதக்' ஆடி அசத்திய பி.ஹெச்.டி. மாணவ, மாணவியர்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: முதன்முதலாக இந்த பத்திரிக்கையாளர் ஜெயந்தி எஸ் ஈஸ்வர்புதியை கடந்த 2013ம் ஆண்டு பெங்களூர் மதிகரே அருகில் உள்ள அவரது வாடகை வீட்டில் சந்தித்தார். அப்போது ஜெயந்தி தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கையாளரிடம், மன்னித்து விடுங்கள் ஜி. என் வீட்டில் நாற்காலி இல்லை. என் மாணவியர் தரையில் தான் அமர்வார்கள். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

Women’s Day Special: Guru Jayanthi inspires PhD scholars at IISc

இரண்டு ஆண்டுகள் கழித்து பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ்(ஐஐஎஸ்சி) வளாகத்தில் ஜெயந்தியை பார்த்தபோது உங்களுக்காக முதல்வரிசையில் இருக்கையை முன்பதிவு செய்துள்ளேன் என்றார் சிரித்தபடி.

ஐஐஎஸ்சியில் ஜெயந்தியின் மாணவியரின் வருடாந்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது மாணவியர் அனைவருமே பி.ஹெச்.டி. படித்து வருபவர்கள். ஜெயந்தியின் சீடர்களில் ஒருவர் மட்டுமே ஆண்.

Women’s Day Special: Guru Jayanthi inspires PhD scholars at IISc

என் மாணாக்கர் படிப்பது என்ன என்பது எனக்கு புரியாது என்று தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக குருவின் பேச்சை கேட்டு நடக்கும் ஜெயந்தி தெரிவித்தார்.

இது குறித்து மகளிர் தினத்தன்று ஜெயந்தி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

தந்தையின் விருப்பத்தை எதிர்த்து செயல்பட்டது கடினம் தான். ஆனால் அதற்காக வருந்தவில்லை. கடவுளுக்கு அடுத்தபடியாக உள்ளவர் குரு அல்லவா. எதை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Women’s Day Special: Guru Jayanthi inspires PhD scholars at IISc

ஜெயந்தி கதக் நாட்டிய ஜாம்பவான் பண்டிட் பிர்ஜு மகராஜின் சிஷ்யை. பி.ஹெச்.டி அதாவது முனைவர் பட்டம் பெற்ற பிறகு தங்களின் வேலையுடன் ஜெயந்தியுடன் சேர்ந்து

நாட்டியத்தை தொடர அவரது மாணவ, மாணவியர் முடிவு செய்துள்ளனர். மாணவ, மாணவியர் ஜெயந்தியை அக்கா என்று அழைக்கிறார்கள். அவரும் அவர்களை தனது குழந்தைகளாகவே கருதுகிறார்.

ஜெயந்தியின் ஒரே மாணவரான சந்தீப் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் படிப்புக்கும், நடனத்திற்கும் சரி சமமாக முக்கியத்துவம் அளிக்கிறார். ஐஐஎஸ்சியில் ஜெயந்தியின் நடனத்தை பார்த்து அசந்த சந்தீப் தானும் நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். தனது ஆசையை அவர் ஜெயந்தியிடம் தெரிவிக்க அவரும் சந்தீப்பை தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இது குறித்து சந்தீப் கூறுகையில்,

எனக்குள் நடன ஆசை ஏற்பட அவர் தான் காரணம். அவரை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நடனம் எப்போதுமே கச்சிதமானது கிடையாது. அதை பயிற்சி மூலம் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பார் என்றார்.

Women’s Day Special: Guru Jayanthi inspires PhD scholars at IISc

ஜெயந்தியின் மாணவியான சென்னையைச் சேர்ந்த வைஷாலி கூறுகையில்,

கலை மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் ஜெயந்தி. இம்முறை தான் இத்தனை பி.ஹெச்.டி. மாணவ, மாணவியர் நடனம் கற்றுக் கொள்கிறோம் என்றார்.

கேரளாவைச் சேர்ந்த துஷாரா வேணுகோபால் கூறுகையில், ஜெயந்தி அக்கா வெற்றிகரமான குரு. வலியை விரும்புங்கள் அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பார் என்றார்.

மும்பையைச் சேரந்த ஸ்ருதி காரேவுக்கு நடனம் மன அழுத்தத்தை குறைக்கும் வழி. தான் நடன வகுப்பில் சேர்ந்ததில் இருந்து ஆய்வு மற்றும் அதனை சமர்பிக்க வேண்டிய நேரம் பற்றி பயப்படவில்லை என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் தினத்திற்கு இத்தனை வரவேற்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி என்று ஜெயந்தி தெரிவித்தார்.

English summary
When this Correspondent first met Jayanthi M Eshwarputhi at her rented house in Muthyalanagar near Mathikere in 2013, she welcomed me with a warning. “Sorry ji. I have no chair to offer. Generally my students sit down. Hope you…,” she was very polite in letting the truth known the journalist-visitor! Two years later, our meeting happened inside the Indian Institute of Science (IISc) campus and this time Jayanthi jokingly said: “Today you need not sit down ji. I have reserved one seat in the front row for you.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X