இளம் பெண்களிடம் சில்மிஷம்.. யோகா ஆசிரியர் அதிரடி கைது
மும்பை: தன்னிடம் யோக கற்க வந்த இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறல் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை சேவ்ரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ்ராம் ராவத். 57 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் எனக் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் ஆர்.ஏ.கே.மார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு வதாலாவில் உள்ள அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தன்னிடம் யோக கற்க வரும் பெண்களை தொடர்ந்து அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியுள்ளார். யோகா வகுப்பு நடத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக யோகா குரு கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.