ஆற்றில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி- 17 படுகாயம்..நேபாளத்தில் சோகம்
சித்வன்: நேபாளத்தில் உள்ள திரிஷோலி ஆற்றில் பஸ் கவிழ்ந்து விழுந்து 21 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேபாளத்தில் சித்வன் என்ற மாவட்டத்தில் நாராயன்காத்முக்லின் என்ற சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விடியற்காலை 4.45 மணி அளவில் திரிஷோலி ஆற்றில் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.
இதனால் தடுப்புச் சுவரைத் தாண்டி 100 அடி ஆழமுள்ள திரிஷோலி ஆற்றில் பஸ் விழுந்தது. இதில் பயணம் செய்த 20 பேர் ஆற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிசிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இந்தப் பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் கிழக்கு நேபாள மலைபகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி 33 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.