ருவாண்டாவில் கொடுமை: சக கைதிகளை கொன்று மனித மாமிசம் சாப்பிடும் கைதிகள்
கிகாலி: ருவாண்டாவில் உள்ள சிறை ஒன்றில் கைதிகள் சக கைதிகளை அடித்துக் கொன்று சாப்பிடும் அவலம் நடந்து வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ளது கிடாராமா சிறை. அந்த சிறையில் அதிகபட்சம் 600 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். அப்படி இருக்கையில் அந்த சிறையில் 6 முதல் 7 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கூட்ட நெரிசலாக உள்ள சிறையில் கைதிகளுக்கு போதிய வசதி இல்லை. இந்நிலையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அப்படி சண்டை ஏற்படும்போது கைதிகள் ஒருவரையொருவர் தாக்கி சக கைதியை கொலை செய்துவிடுகிறார்கள்.
இறந்த கைதியின் மாமிசத்தை சாப்பிட்டு பிற கைதிகள் உயிர் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறையில் போதிய வசதி இல்லாததால் தினமும் 7 முதல் 8 கைதிகள் வரை உயிர் இழப்பது தெரிய வந்துள்ளது.
அந்த சிறையின் மோசமான நிலை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் புகார் தெரிவித்தும், போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.