For Daily Alerts
Just In
ரஷ்யா நூலகத்தில் பயங்கர தீவிபத்து – ஒன்றரை கோடி புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின!!
மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப்பெரிய நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத ஒன்றரை கோடி புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பலாகினh.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 ஆவது மாடியில் பிடித்த தீயானது சற்று நேரத்தில் மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஏராளமான வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்கப் போராடினர்.
ஆனால் காற்றின் வேகம் காரணமாக கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மிக அரிய புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் ஒன்றரை கோடி புத்தகங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாயின.
English summary
One of Russia's largest academic libraries, which contains millions of unique historical documents, has gone up in flames in Moscow. A part of the building's roof collapsed before dozens of fire fighters managed to contain the blaze.
Story first published: Saturday, January 31, 2015, 13:30 [IST]