நாடு முழுவதும்... 72 மணி நேரம் வாட்ஸ் அப் சேவையை முடக்க பிரேசில் நீதிபதி அதிரடி உத்தரவு
சாவோ பாலோ: நாடு முழுவதும் 72 மணி நேரத்திற்கு வாட்ஸ் ஆப் சேவையை முடக்கி வைத்து உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரேசில் நாட்டு நீதிபதி ஒருவர். கடந்த 6 மாதங்களில் இதுபோல நடந்திருப்பது இது 2வது முறையாகும்.
அந்த அதிரடி நீதிபதியின் பெயர் மார்சல் மான்டால்வோ. லகோர்டா என்ற நகரில் உள்ள கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறார். ஒரு குற்றச் செயல் தொடர்பான வழக்கில் வாட்ஸ் ஆப் சேவையை நடத்தி வரும் பேஸ்புக் நிறுவனம் உரிய தகவலைக் கொடுக்க மறுத்த காரணத்தால், வாட்ஸ் ஆப் சேவையை 72 மணி நேரத்திற்கு முடக்கி வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார் இந்த நீதிபதி.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஏற்கனவே இதேபோன்ற ஒரு பிரச்சினையில் சிக்கிய வாட்ஸ் ஆப் கடந்த டிசம்பர் மாதமும் இதுபோல 12 மணி நேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில், "பிரேசிலில் இது சோக தினம்" என்று வர்ணித்துள்ளார்.