செத்துப் போன புத்தரின் “அமைதி”- மியான்மரில் வதைபடும் முஸ்லிம் மக்கள்!
ரங்கூன்: புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர்.
இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர்.
மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மூன்று வகை முஸ்லிம்கள்:
அங்கு பிரதானமாக மூன்று வகையாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் .01) பான்தாய்கள் - பர்மிய பூர்வீகக் குடிகள், பஷுஷ் - சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர், ரோஹிங்கியா - இந்தியா,பங்களா தேஷ் பூர்வீகத்தினர் என அறியப்படுகிறது.
இனவாதச் செயல்கள் அதிகரிப்பு:
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956 இல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது.
வங்காளத்திற்கு இடம்பெயர்வு:
1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது.
சர்வாதிகார ஆட்சியில் மியான்மர்:
கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சியமைப்புக்கு மாறியபோது மீண்டும் மியான்மரில் இனக்கலவரங்கள் தொடங்கின.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்:
அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள். 280 பேருக்குமேல்
புத்த பிக்குகள் துணையுடன்:
வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது.
நாட்டை விட்டு வெளியேற்றம்:
இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் புளி மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்.
தத்தளிக்கும் மக்கள்:
அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
பரிதவிக்கும் அகதிகள்:
சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.
அதிகரிக்கும் கண்டனங்கள்:
பின்னர் மலேசியாவும், இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடதக்கது. ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து சர்வதேச அளவில் கடும் கண்டன குரல் எழும்பி வருகின்றன.