நேபாள நிலநடுக்கம்... கோரத்தாண்டவமாடிய நிலமகள்
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. கட்டடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
இந்திய விமானங்கள் விரைவு
இதனிடையே நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள், உத்தரபிரதேச மாநிலம் ஹின்டன் விமான தளத்தில் இருந்து நேபாளம் விரைந்துள்ளன.
|
பிராத்தனை
நிலநடுக்கத்திற்கு பலியானவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
|
பாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ரவீணா டான்டன், யாமி கவுதம் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
டெண்ட் வேண்டும்
நிலநடுக்கத்தில் காயம்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மருத்துவமனையில் வெளிப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அவசரமாக டெண்ட் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அனைவருக்கும் உதவி
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவோம். சோகத்திற்கும் துயரத்திற்கும் எல்லையில்லை. தேசத்திற்குத்தான் எல்லை உண்டு என்பதை உணர்த்துகிறது இந்த ட்விட்டர் அஞ்சலிகள்.