சீனா அமெரிக்காவை பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறது: டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: சீனா அமெரிக்காவை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இன்டியானா மாநிலத்தில் உள்ள போர்ட் வெயினில் நடந்த பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
வர்த்தகத் துறையில் அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளது சீனா. சீனா அமெரிக்காவை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறது. அது தொடர்ந்து நம் நாட்டை பலாத்காரம் செய்ய விடக் கூடாது.
இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். நம்மிடம் அதிகாரம் உள்ளது. எனக்கு ஒன்றும் சீனா மீது கோபம் இல்லை. ஆனால் அமெரிக்க தலைவர்கள் தான் திறம்பட செயல்படவில்லை என்றார்.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டும் சீனா அமெரிக்காவை பலாத்காரம் செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.