For Daily Alerts
Just In
அமெரிக்க ஷாப்பிங் மாலில் பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
வாஷிங்டன்: சியாட்டிலின் வடக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கபர் தப்பி விட்டார்.
சியாட்டிலிலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்லிங்டன் நகரில் உள்ள காஸ்கட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மர்ம நபர் துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் பலியானார்கள். அந்த நபர் தப்பி விட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் குழப்பமாக உள்ளது. இரவு எட்டரை மணி அளவில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் மால் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காயமடைந்து கிடந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
English summary
At least four persons were killed in a shooting at a mall north of Seattle. One suspect remains at large authorities in Washington tell the media. On its twitter account the Washington State Patrol says that the four were shot Friday at the Cascade Mall in Burlington, about 105 kilometers north of Seattle.
Story first published: Saturday, September 24, 2016, 10:05 [IST]