For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகுகிறது... பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் போராட்டம்
பாரீஸ் நகரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பாரீஸ்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உலகம் முழுவதும் எழுச்சிப் போராட்டங்கள் களை கட்டியுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் போராட்டங்களை விதம் விதமாக நடத்தி தமிழகத்தின் வீர விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறவுள்ளது. வருகிற 22.01.17 ஞாயிற்று கிழமை பகல் 2 மணி அளவில் Place de trocadéro et du 11 novembre,75016,Paris,(metro 6) என்ற இடத்தில் ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவிக்க இருக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
இதில் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English summary
France based Tamils are planning for a protest in support of Jallikattu in Paris on sunday.
Story first published: Friday, January 20, 2017, 18:14 [IST]