பட்டம் வாங்கும் முன்பு ஆசிரியரின் முகத்தில் காரித் துப்பிய மாணவர்: தீயாக பரவும் வீடியோ
அம்மான்: ஜோர்டானில் மாணவர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கும் முன்பு மேடையில் இருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார்.
ஜோர்டானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவின்போது மாணவ, மாணவியர் வரிசையாக சென்று மேடையில் இருந்த முக்கிய பிரமுகரிடம் இருந்து பட்டம் பெற்றனர்.
அப்படி வரிசையாக செல்கையில் இளங்கலை பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பிவிட்டு சென்றார். நீ மட்டும் பட்டம் வாங்கிவிட்டால் என் முகத்தில் துப்பலாம் என்று அந்த ஆசிரியர் மாணவனிடம் தெரிவித்திருந்தாராம். அதனால் தான் பட்டம் வாங்கும் முன்பு ஆசிரியரின் முகத்தில் துப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் அந்த மாணவரின் இளங்கலை பட்டத்தை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சகத்திடமும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.