For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் துப்பாக்கி சூடு? .. "சவுண்டு" கேட்டு மிரண்டு ஓடிய பயணிகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வெளியேறி ஓடுவதை போல காட்சிகள் வெளியான நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தை ஏர்போர்ட் நிர்வாகம் மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் அமெரிக்க டிவி சேனல்களில் இந்திய நேரப்படி இன்று காலையில் ஒரு காட்சி வெளியாகி மக்களை பீதிக்குள்ளாக்கியது. அந்த காட்சியில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கும்பல், கும்பலாக மக்கள் பதறியடித்தபடி வெளியே ஓடிவரும் காட்சி இடம் பெற்றிருந்தது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும், போலீசார் விரைந்து வந்ததாகவும், சில பயணிகள் டிவிட் செய்திருந்தனர். தரையோடு தரையாக மக்கள் படுத்து கிடப்பதை போன்ற போட்டோக்களும் டிவிட்டரில் வெளியிடப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும், இதனால்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, ஏர்போர்ட் நிர்வாகம் இதை மறுத்துள்ளது. திடீரென பெரிய சத்தம் வெளியே கேட்டதாகவும், அதனால் மக்கள் பீதியடைந்ததாகவும் ஏர்போர்ட் நிர்வாகம் கூறுகிறது. சத்தம் ஏன் வந்தது என்பதை போலீசார் விசாரித்து வருவதாக ஏர்போர்ட் நிர்வாகம் கூறியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
The Los Angeles airport police have confirmed that there were no shots fired at Los Angeles airport. The reports had been proven to be "loud noises only," it said on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X