லைட்டா கண் அசந்த ஊழியர்... கலாய்ச்சி பை செய்த ஆபீஸ் நண்பர்கள்... இப்ப இது "வைரல்"!
லண்டன்: உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள். மதிய நேரத்தில் பெரும்பாலானவர்கள் மந்தமாக தூக்க கலக்கத்திலேயே வேலை செய்வதுண்டு.
சிலர் தங்களது கட்டுப்பாட்டையும் மீறி, லைட்டாக குட்டித் தூக்கம் கூட போட்டு விடுவதுண்டு. ஆனால், அப்படித் தூங்கப்போய் தற்போது இணையத்தில் பிரபலமாகியுள்ளார் ஒரு ஊழியர். அவரைத் தான் இப்போது நெட்டிசன்கள் இன்டர்நெட்டில் கலாய்ச்சிபை செய்து கொண்டுள்ளனர்.
இப்படி தூக்கம் போட்டு சிக்கிய அப்பாவியின் பெயர் எட்வர்ட் பரசிவேஸ்சு. கனடாவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக இருக்கிறார்.
பணியில் சேர்ந்த 2வது நாளே இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அப்படியே அசந்து தூங்கி விட்டார். விடுவார்களா சக ஊழியர்கள்.. சுற்றிச் சூழ்ந்து நின்று கும்மியடித்து விட்டனர்.
சத்தம் போடாமல் புன்னகை பூப்பது போல வாயை விரித்து வைத்துக் கொண்டு ஒரு குரூப் போட்டோ எடுத்து விட்டனர்.
பின்னர் இந்தப் படத்தை ரெட்டிட் தளத்திலும் போட்டு விட்டனர். பிறகென்ன இது இப்போது வைரல் ஆகி விட்டது.
உலகத் தொழிலாளர்களே.. உங்களுக்கெல்லாம் ஒரே ஒரு அட்வைஸ்தான்.. வேலை பார்க்கும்போது வேலை மட்டுமே பாருங்க.. தூங்காதீங்க.. இல்லாட்டி இப்படித் தான் ஆகி விடும்.